பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை
முதலமைச்சர் ஸ்டாலின் பெற்று வருவார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி சென்றடைந்தார். பின்னர், மாலை 5 மணிக்கு லோக் கல்யாண்மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக எதிரார்க்கப்படுகிறது. குறிப்பாக, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்குமாறும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பணிகளை தொடங்குவது குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கான மருந்துகளை வழங்குவது குறித்தும் ஆலோசிப்பார் எனத் தெரிகிறது.
இந்நிலையில், தமிழ்நாடிற்கு தேவையான தடுப்பூசியுடன் நிதியையும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்று வருவார் என்பதை நம்புவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.