சேலத்திலிருந்து நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர்!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி மாதம் தனது பரப்புரையை தொடங்கினார்.…

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை முதல் மீண்டும் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி மாதம் தனது பரப்புரையை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி பரப்புரையை முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டு வந்தார்.

இதனிடையே தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதால், அதிமுக கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு ஏற்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நாளை மாலை முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையை தொடங்குகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.