தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை சந்தித்துப் பேசினார். இருவரும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்த நிலையில், நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவருடன் அமைச்சர்கள் துரைமுருமகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜ கண்ணப்பன் ஆகியோர் உடன் சென்றனர். இந்த சந்திப்பின்போது நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநரிடம் வலியுறுத்தப்படுகிறது. அதேநேரத்தில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி மாதம் கூடவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையும் இடம்பெறவிருக்கிறது. இந்த சந்திப்பின்போது ஆளுநருக்கு முதல்வர் அழைப்பு விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.