முக்கியச் செய்திகள் தமிழகம் சட்டம்

கொரோனா முடிவில் தாமதம்: உயர் நீதிமன்றம்!

கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கினை விசாரணை செய்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானார்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, “தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு சமமான அளவில் மருந்து, தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மருந்து, தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு தொடர்பான நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடடனர்.

முடிவுகளை விரைவாக அறிவதன் வாயிலாக கொரோனா பரவலையும் விரைந்து கட்டுப்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறைந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் வழக்கின் விசாரணையை மே 24 ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தயவுசெய்து எங்களை ஆதரியுங்கள்! – மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ட்வீட்

Jeni

நாளை குரூப் 1 முதல் நிலைத் தேர்வு – 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்

NAMBIRAJAN

ஆட்டோ மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் ஆசிரியர்கள்

Arivazhagan Chinnasamy