கருப்பு பூஞ்சை தொற்று நோயாக அறிவிப்பு: தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை தொற்று குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிக்கப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி…

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை தொற்று குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிக்கப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன், புதுச்சேரியில் இதுவரை 20 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் குறிப்பிடத்தக்க தொற்று நோயாக கருப்பு பூஞ்சை தொற்று அறிவிக்கபட உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.