புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை தொற்று குறிப்பிடத்தக்க தொற்று நோயாக அறிவிக்கப்பட உள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இந்தியாவில் கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தர ராஜன், புதுச்சேரியில் இதுவரை 20 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் குறிப்பிடத்தக்க தொற்று நோயாக கருப்பு பூஞ்சை தொற்று அறிவிக்கபட உள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.