எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ-வுமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், அஇஅதிமுக துணை பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி பங்கேற்று பேசினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் எங்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் இணைந்து அதற்கு பின் முடிவு செய்யப்பட்டு தேர்தல் களத்தில் நாங்கள் நிற்போம் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக 3 அணிகளாக பிரிந்து நிற்கிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த முனுசாமி, எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாள் விழாவில் கட்சியின் நிறுவனத் தலைவர் புகழை நினைவு கூறும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிங்க தமிழகம் முழுவதும் எல்லா நகரிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் சொல்லும் 3 பேர் தலைவருக்கு எங்கேயாவது விழா எடுத்திருக்கிறார்களா? எங்கேயாவது ஒரு கூட்டம் போட்டு இருக்கிறார்களா? அப்படி என்றால் அவர்கள் இந்த கட்சியிலேயே இல்லை என்றுதான் அர்த்தம். இந்த கட்சியில் இல்லாத ஒருவரை பத்திரிகைகளும் ஊடகங்களும் தூக்கி வைத்திருக்கின்றன. இது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்குகின்ற கட்சி எனக் கூறினார்.
கடந்த தேர்தலில் டிடிவி தினகரன் கட்சி அதிக வாக்குகள் வாங்கியது. அதனால் வரும் பாராளுமன்ற தேர்தலில் கட்சி ஒன்றினைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, டிடிவி தினகரன் புரட்சித்தலைவி அம்மாவுக்கு துரோகம் செய்த காரணத்தினால் புரட்சித்தலைவி அம்மா உயிரோடு இருந்த காலத்தின்போதே 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்சியை விட்டு நீக்கப்பட்ட நபர். புரட்சித்தலைவி அம்மா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அவர் ஒரு நாள் கூட அங்கு வந்து பார்க்கவில்லை. புரட்சித்தலைவி இறந்த பின்புதான் அவர் சித்தியோடு வந்திருந்தார். அப்படிப்பட்ட ஒரு நபர் ஏதோ ஒரு சூழ்நிலையில் வாக்கு வாங்கி இருக்கிறார். இந்த தேர்தலில் அவர் வாக்கு வாங்குவாரா என்பதை பார்ப்போம் என்றார்.
சசிகலா எடப்பாடியை சந்திப்பேன் என்று கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, அவர்கள் கட்சியில் இல்லாத நபர்கள். அவர்கள் அவர்களை காப்பாற்றிக் கொள்வதற்காக இதுபோன்ற கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இல்லை என்றார்.