முக்கியச் செய்திகள்தமிழகம்

விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி!

மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் நேற்று காலை அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து காலை 9:30 மணி அளவில் விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திரைப்பட துறையில் கொடி கட்டி பறந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் காலூன்றி, அதிலும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவர் வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை  அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரின் குடும்பத்தாருக்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறினர். விஜயகாந்த் உடல் கண்ணாடிப் பெட்டியில் கிடத்தப்பட்டிருந்ததைக் கண்டு, நடிகர் விஜய் கண் கலங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் விஜயகாந்த் மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.

விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முக்கிய திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். விஜயகாந்த்தை வைத்து அதிக திரைப்படங்கள் இயக்கிய இயக்குநர்களில் ஒருவர் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். மேலும், நடிகர் விஜய்யுடன் இணைந்து திரைப்படங்களிலும் விஜயகாந்த் நடித்துள்ளார்.

Imageஇதனைத்தொடர்ந்து விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் பார்வைக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு  இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தமிழகத்தில் கடந்த ஒரே நாளில் 24,898 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு!

EZHILARASAN D

செங்கல்பட்டு பா.ம.க நகர செயலாளர் வெட்டிக்கொலை – ஆதரவாளர்கள் போராட்டம்

Web Editor

பில்கீஸ் பானு வழக்கில் 11குற்றவாளிகளை குஜராத் அரசு விடுத்த விவகாரம் – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு.!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading