நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ; சென்னையில் விலை நிலவரம் என்ன…?

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியுள்ளன.

மேற்காசிய மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.

அதன் படி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90-க்கு விற்பனையாகிறது. அதே போல் டீசல் லிட்டருக்கு ரூ. 3.11 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.95.47-க்கு விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.