முக்கியச் செய்திகள் தமிழகம்

கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயில் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கோயில் சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்தவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கோயில்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுவர்களை பணிநிரந்தரம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்

EZHILARASAN D

திறந்துகிடந்த ஏடிஎம் இயந்திரம் – பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் அதிர்ச்சி

Web Editor

பாஜக எம்எல்ஏ மகன் கைது – வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல்!

Syedibrahim