வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதையடுத்து இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
“தென்மேற்கு வங்கக் கடலில் இருந்த மேலடுக்க சுழற்சி தென்மேற்கு ஒட்டிய மேற்கு மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு வரும் 24-ம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிய வாய்ப்புள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும். அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை அரபிக்கடலில் தென்கிழக்கு பகுதிகளிலும், மாலத்தீவு கொமேரியன் பகுதி, தெற்கு வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் அந்த மாதிரி கடற்கரையில் ஒரு சில பகுதிகளிலும் அடையும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழையும், வரும் 24-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், வரும் 25-ம் தேதி கேரளாவில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிக கனமழை இன்றும், நாளையும் கேரள பகுதிகளில் பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.