ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 5.5 ரிக்டர் அளவாக பதிவு!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜூர்ம் (Jurm) அருகே, 5.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இரவு 11:27 மணிக்கு, 173 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆப்கானிஸ்தானில், குறிப்பாக அதிக செயல்பாடுள்ள நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள இந்து குஷ் பகுதியில், அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுக்களின் மோதல் மண்டலத்தில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளதால், அது நிலநடுக்கங்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. மேலும், ஹெராட் பகுதி உட்பட நாட்டின் சில பகுதிகள் வழியாக ஒரு பெரிய புவிப்பிளவு கோடும் செல்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.