முக்கியச் செய்திகள்தமிழகம்

மத்திய அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1-ம் தேதி வெடிகுண்டு வெடித்து 10 பேர் காயமடைந்தனர்.  இந்த சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.  இதனிடையே மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் ஷோபாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜேவின் கருத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது. சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தொடர்ந்து, இந்நிகழ்வு தொடர்பாக மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்புக் கோரினார். இதனிடையே, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்தார்.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது மதுரையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரில் வெறுப்பூட்டும் பேச்சால் பகையை வளர்த்து, பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

”மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை பாம்பு பிடிப்பவர்களுக்கு வழங்க வேண்டும்” – ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Editor

மகனைச் சிகிச்சை அளிக்க வைத்துவிட்டு சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர்

Arivazhagan Chinnasamy

கல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலை விற்றால் சிறை

Halley Karthik

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading