மூதாட்டியை கொன்ற ராணுவ வீரர் தப்பியோட்டம்

கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என கூறி அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டி ரானுவ வீரர் கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம் பூதிப்புரம்…

கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது பெரியம்மா முத்தம்மாள் தான் காரணம் என கூறி அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டி ரானுவ வீரர் கொலை செய்துள்ளார்.

தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள வாழையாத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரது மகன் கண்ணையா என்ற கண்ணன்(38). ராணுவ வீரரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது பெரியப்பா ராமுவின் மனைவி முத்தம்மாள்(64) தான் காரணம் என அவருடன் கண்ணன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரவு வாழையாத்துப்பட்டியில் உள்ள தனது மகள் ஜோதியின் வீட்டின் முன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த முத்தம்மாளுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்ட கண்ணன், ஆத்திரத்தில் அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மூதாட்டி முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே அரிவாளால் வெட்டிய கண்ணன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ராணுவ வீரரை தீவிரமாக தேடி வருகின்றனர். ரானுவ வீரரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.