வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்களில் உரிமை கோராமல் உள்ள நாற்பதாயிரம் கோடி ரூபாயை உரியவர்களிடம் உடனடியாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உழைத்து, வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை எதிர்கால தேவைக்கு, பணமாக பெறுவதற்காக வங்கிகளிலும்,காப்பீடு நிறுவனங்களிலும் சேமிப்பது வழக்கம்.பயனாளி குறித்த காலத்திலோ, தேவைப்படும் போதோ பணத்தை பெற்று கொள்கிறார். ஆனால் பயனாளி எதிர்பாராவிதமாக, கடுமையாக உடல் நலம் பாதிப்படைந்தலோ, மரணித்தலோ பணத்தை பெறுவதில் சிக்கல் உருவாகிறது. கணக்கு தொடங்கும் போதே, தனக்கு பின்னால் இந்த தொகையை பெறும் வாரிசுதாரர் பெயரை சரியாக குறிப்பிட வேண்டும். இல்லையென்றால் சிக்கல் தான்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவில் வங்கிகளிலும், காப்பீடு நிறுவனங்களிலும்,உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகை நாற்பதாயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அந்த தொகையானது உரிய வாரிசுதாரர்களுக்கு சென்றடைய வேண்டும் என பத்திரிக்கையாளர் சுஷெட்டா தலால்,உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதன் படி உரிமை கோரப்படாமல் இருக்கும் தொகையானது 1990 ம் ஆண்டு 400 கோடி ரூபாயாக இருந்தது என்றும்,2019ம் ஆண்டு 18ஆயிரத்து 381 கோடி ரூபாயாகவும், 2020ம் ஆண்டு 33ஆயிரத்து 114 கோடி ரூபாயாகவும்,2021ம் ஆண்டில் 39ஆயிரத்து 264 கோடியாகவும் அதிகரித்து உள்ளது என குறிப்பிட்டிருந்தார்
மேலும் உரிமை கோரப்படாத தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆன்லைன் தொகுப்பை ரிசர்வ் வங்கி உருவாக்க வேண்டும். அதில் வங்கி கணக்கில் உள்ள வாடிக்கையாளரின் பெயர், முகவரி,கடைசியாக பரிமாற்றம் செய்த தொகை ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.அத்துடன் வங்கிகளும், காப்பீடு நிறுவனங்களும் இது குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, உரிமை கோராமல் இருக்கும் தொகை மற்றும் செயல்படாத கணக்கு குறித்த மத்திய தகவல் தொகுப்பை உருவாக்குவது குறித்து பதிலளிக்குமாறு மத்திய நிதி அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, செபி ஆகிய அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது
இந்த உத்தரவை அடுத்து உரிமை கோரப்படாமல் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தொகை விரைவில் அவரவர் வாரிசுதாரர்களுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.