முதலமைச்சர் பயணம் குறித்து அவரே சொல்வார்: அமைச்சர் துரைமுருகன்

முரசொலி மாறன் திமுகவில் அறிவுஜீவிகள் அணிக்கு தலைவராக இருந்தவர் என திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு…

முரசொலி மாறன் திமுகவில் அறிவுஜீவிகள் அணிக்கு தலைவராக இருந்தவர் என திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள முரசொலி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என் நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் கூறியதாவது:

முரசொலி மாறன் திமுகவில் அறிவுஜீவிகள் அணிக்கு தலைவராக இருந்தவர். கலைஞருடைய அக்கா மகன் என்றாலும் சாதாரண தொண்டனைப் போல் இயக்கப் பணிகள் ஆற்றியவர். மத்திய அமைச்சராக இருக்கும்போது அமைச்சரவையே வியக்கும் வகையில் பணியாற்றியவர்.

இன்றைக்கும் நாடாளுமன்றத்தில் முரசொலி மாறனுக்கு தனிப்புகழ் உண்டு என்றார் அமைச்சர் துரைமுருகன்.  முதலமைச்சரின் டில்லி பயணம் குறித்த கேள்விக்கு முதலிலேயே சொல்லி விடணுமா? அவர் வந்து சொல்வார் என்று பதிலளித்தார் துரைமுருகன்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.