சென்னையில் மதுபோதையில் தலைமைக் காவலரை தாக்கிய 3 அரசு ஊழியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவல்லிக்கேணி பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலைய தலைமைக் காவலர் ஸ்டாலின் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல், மதுபோதையில் தலைமைக் காவலர் ஸ்டாலினிடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரது சட்டைப்பையை கிழித்து கடுமையாக தாக்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து தலைமைக் காவலர் ஸ்டாலின், மற்ற காவலர்களின் உதவியுடன், தன்னை தாக்கிய அந்த நான்கு பேரையும் திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது அந்த கும்பலில் மூன்று பேர் அரசு ஊழியர்கள் என்பது தெரிய வந்தது.
இதையும் படியுங்கள் : இபிஎஸ் முன்னிலையில் இணைந்த ஈரோடு மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள்
சென்னை தலைமைச் செயலகத்தில் தட்டச்சராக பணியாற்றிய பாலமுருகன், அரசு செய்தித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் தமிழ்செல்வன், அரசு ஃபிலிம் துறையில் உதவியாளராக பணியாற்றி வரும் விஜய் ஆகிய மூவர் தான் தலைமைக் காவலர் ஸ்டாலினை தாக்கியுள்ளனர். தொடர்ந்து, நான்கு பேர் மீதும், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.