முக்கியச் செய்திகள்தமிழகம்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அண்ணாமலை பேசியதாவது:

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும். இதனை தொடர்ந்து விஷச்சாராயம் குடித்து  உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உதவும் வகையில் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டு மத்திய அரசு நலத்திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க வழிகாட்டப்படும்.

இந்த விஷச்சாராய விவகாரத்திற்கும், திமுக அடிமட்ட தொண்டர்களுக்கு தொடர்பு இருக்கிறது.  உடனடியாக மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு துறை அமைச்சர் பதவி விலக வேண்டும். மாவட்ட எஸ்பி-ஐ மட்டும் சஸ்பெண்ட் செய்துவிட்டு மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்தது சரியல்ல. மேலும் தமிழக முழுவதும் நாளை மறுநாள் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த நிகழ்வு குறித்து அமித்ஷா மற்றும் ஜெ.பி நட்டா ஆகியோர் தொலைபேசி வாயிலாக கேட்டிருந்த நிலையில் அவர்களுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

12 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்றுள்ளனர்: மத்திய கல்வி அமைச்சகம்

Arivazhagan Chinnasamy

மன்னார்குடி முதல் ரெய்டு வரை; யார் இந்த காமராஜ்?

EZHILARASAN D

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் – அமைச்சர் உதயநிதி பேச்சு!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading