கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்டி சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் பங்கில் சென்று பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி சென்ற இளைஞர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் குட்டி சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கல்லூரி வாசல்களில் சுற்றி திறிவார். இது போலீஸார் உள்பட அனைவரையும் வியப்படை செய்தது.
இதை அடுத்து தற்போது குட்டி சைக்கிளில் பெட்ரோல் பங்க்குற்கு சென்று சைக்கிளுக்கு
பெட்ரோல் போட சொல்லி உள்ளார். இதனால், பெட்ரோல் பங்க் ஊழியர் இளைஞரின் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் தொடர்ந்து பார்க்கும் போது சைக்கிளின் இருக்கைக்கு கீழ் பகுதியில் வைக்கப்பட்ட பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி சொல்லி பெட்ரோல் வாங்கி சென்றார். பங்க்
ஊழியர்களை அதிர்ச்சியடைவைத்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ம. ஸ்ரீ மரகதம்