திருப்பூர் பேருந்து நிலையத்தில், மதுபோதையில் மயங்கி கிடந்தவர்களால் பெண்கள், குழந்தைகள் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டு கலைஞர் மத்திய பேருந்து நிலையம் என புதிதாக திறக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்டு 5 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் பேருந்து நிலையத்தில் ஏராளமான வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் வழிப்பறி மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மதுபோதையில் பேருந்து நிலைய மையப்பகுதிகளில் அலங்கோலமாய் மயங்கி விழுந்து கிடக்கின்றனர்.
பெண்கள் குழந்தைகள் அதிக அளவில் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தில் ஆடைகள் கலைந்து போதையில் மயங்கி கிடக்கும் நபர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட முடியாமல் முகம் சுழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசார் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற செயல்களை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்