குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை கீழடுக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பதிவாகியது.
இதனிடையே இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, மதுரை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







