11 மருத்துவ கல்லூரி கட்டட முறைகேட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்பட 11 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 76 ஆயிரத்து 778 சதுடி அடிகளில் கட்டுமானம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 9 லட்சத்து 99 ஆயிரத்து 296 சதுர அடிகளில் மட்டுமே கட்டடம் கட்டப்பட்டது. 1 லட்சத்து 77ஆயிரத்து 482 சதுர அடி கட்டடம் கட்டப்படவில்லை. இதன்மூலம் 52 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இதுபோல 11 மருத்துவக் கல்லூரிகளிலும் பெருந்தொகை முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதில், கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த புகாரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த அனுமதிக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியிருந்தது.
இந்தநிலையில் 2017-21 கால கட்டத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு முதற்கட்ட விசாரணை மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதில்
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.