சிவாஜியின் கனவை நாம் நிறைவேற்ற வேண்டும்; பிரதமர் மோடி

மராட்டிய மன்னர் சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 1600களில் இந்தியாவை ஆண்ட மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் பிப்.19ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை…

மராட்டிய மன்னர் சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

1600களில் இந்தியாவை ஆண்ட மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் பிப்.19ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடி சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர், சிவாஜியால் நிலைநிறுத்தப்பட்ட சமூக நலன் தலைமுறைகள் கடந்து போற்றப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன். அவருடைய சிறந்த தலைமைப் பண்பும், அவர் காத்த சமூக நலமும் தலைமுறைகள் தாண்டி மக்களை உற்சாகப்படுத்தி வருகிறது. உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் அவர் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளவில்லை. அவரது கனவை நிறைவேற்ற நாம் பாடுபட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜியின் கனவை நிறைவேற்றும் விதமாகவே அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.