சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே, தண்ணீர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே அதிகாலை டேங்கர் லாரியை ராமு என்பவர் தூக்க கலக்கத்தில் ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையின் குறுக்கே இருந்த சென்டர் மீடியனில் மோதி லாாி கவிழ்ந்தது. இதனால் மகாலிங்கபுரம் செல்லக் கூடிய மேம்பாலத்தில் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டது. பின்னா் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிகாலை நேரம் என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
—-ரூபி.காமராஜ்
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்