நமது கைப்பேசிக்கு தொடர்ச்சியாக வரும் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் திருட்டு தொடர்பான அழைப்புகளை தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.
நாம் முக்கியமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது நமக்கு ஒரு புதிய நம்பரிலிருந்து அழைப்பு வரும். நாமும் ஏதோ முக்கியமான போன் கால் என நினைத்து போனை எடுப்போம். ஆனால் அது ஸ்பேம் கால் அல்லது கஸ்டமர் கேர் கால் அல்லது சைபர் குற்றங்களில் ஈடுபடும் எண்களில் இருந்து வரும் போன் அழைப்புகளாக இருக்கும். இதனை எப்படி கட்டுப்படுத்துவது, இப்படியான ஸ்பேம் அழைப்புகள் வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை குறித்து விரிவாக காணலாம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீங்கள் ஆன்ராய்டு அல்லது ஐபோன் பயன்படுத்துபவரா.? இந்த ஸ்பேம் அழைப்புகளில் இருந்து உங்களையும் , உங்கள் தொலைபேசி அழைப்புகளையும் தற்காத்து கொள்ள மிக சுலபமான வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.
ஐபோன் பயனாளர்கள் செய்ய வேண்டியது..?
ஐபோனில் ஸ்பேம் அழைப்புகளை தடுப்பதற்கு முதலில் ட்ரூ காலர் எனும் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்கள் எண் மற்றும் இமெயில் முகவரி மற்றும் அதில் கேட்கும் விபரங்களை நிரப்பிய பின்னர் ட்ரூ காலர் செட்டிங்கிற்கு செல்ல வேண்டும்.
பின்னர் ட்ரூ காலர் செட்டிங்கில் உள்ள போன் செட்டிங் விபரங்களுக்குள் செல்ல வேண்டும். அதில் அழைப்புகளை முடக்குவதற்கான (Call Blocking) செட்டிங்ஸ் இருக்கும். அதனுள் சென்றால் நான்கு விதமான விருப்பங்களை காண்பிக்கும். அவை அனைத்தையும் ஆன் செய்தால் உங்களுக்கு தேவையற்ற அழைப்புகள் அல்லது சைபர் குற்றங்கள் தொடர்பான அழைப்புகள் இனி வரவே வராது.
இதனையும் படியுங்கள்: நீங்களும் Facebook புளூடிக் வாங்கலாம்; எப்படி?
ஆன்ராய்டு பயனாளர்கள்:
கைபேசி பயன்படுத்துவோரில் ஐபோன் பயனாளர்களை விட ஆன்ராய்டு பயனாளர்கள்தான் அதிகம். இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் 90% க்கும் மேல் ஆன்ராய்டு பயனாளர்கள் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் சைபர் திருட்டுக்கள் அதிகமாக ஆன்ராய்டு பயனாளர்களை குறிவைத்தே நடைபெறுகிறது. எனவே தேவையற்ற அழைப்புகளை நிறுத்தவோ, முடக்கவோ பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு பயன் தரும்.
முதலில் பிளே ஸ்டோரில் கூகுள் டயலரை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். சில ஆன்ராய்டு போன்களில் கூகுள் டயலர் நிரந்தரமாகவே இருக்கும். அப்படி இல்லையெனில் கூகுள் டயலரை டவுன்லோட் செய்யவும். அதன் பின்னர் கூகுள் டயலரில் வலது மேல் ஓரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை அழுத்தினால் செட்டிங்கிற்கு செல்லும். செட்டிங்கில் Caller ID and Spam என்ற தேர்வு இருக்கும். அதனுள் சென்றால் Filter Spam Calls என்பதனை அழுத்தினால் உங்களுக்கு வரும் தேவையற்ற , சைபர் திருட்டு தொடர்பான அழைப்புகளை உடனே முடக்கலாம்.
ஒரு வேளை நீங்கள் சாம்சங் நிறுவனத்தின் கைபேசியை பயன்படுத்துவோராக இருந்தால் ஸ்பேம் கால்களை முடக்குவது மிக சுலபம். உங்கள் சாம்சங் டயலரில் உள்ள செட்டிங்கிற்கு சென்றாலே ஸ்பேம் அழைப்புகளை முடக்கும் (Block Spam and Spam Calls) எனும் தேர்வு இருக்கும் அதன் உபயோகித்து ஸ்பேம் அழைப்புகள் உங்களுக்கு வராமல் துண்டித்து கொள்ளலாம்.
சமீபத்திய தமிழகத்தையே உலுக்கிய ஏடிஎம் கொள்ளை ஈடுபட்ட கொள்ளையர்களை ஹரியானாவின் மேவாட் நகரத்தில் காவல்துறை கைதுசெய்துள்ளதை அனைவரும் அறிவோம். மேவாட் நகரம் தொடர்ச்சியான சைபர் திருட்டுக்களில் ஈடுபட்டு பணத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையர்களின் புகழிடமாக விளங்கி வருகிறது.
மேவாட் நகரத்தில் மட்டும் கடந்த 1 வருடத்தில் 5லட்சம் சிம் கார்டுகளை ஹரியானா காவல்துறை முடக்கியுள்ளது. இந்த சைபர் திருட்டுக்களால் கிட்டத்தட்ட் 300 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சைபர் திருட்டுக்கள் தொடர்பான அழைப்புகள் உங்கள் கைப்பேசியில் வராமல் தடுக்க மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
–யாழன்