முக்கியச் செய்திகள் குற்றம்

பெண் கொடுக்காத தாய் மாமன்: பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்

மதுரை அருகே பெண் கொடுக்காத ஆத்திரத்தில் தாய் மாமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகரில் வசித்து வரும் பாலமுருகனுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சோழவந்தானை சேர்ந்த பாலமுருகனின் சகோதரி மகன் தீபன் சக்கரவர்த்தி, கேட்டு வந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால், பாலமுருகனின் மகளோ தீபன் சக்கரவர்த்தியை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபன் சக்கரவர்த்தி, பாலமுருகன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து செல்லூர் காவல் நிலையத்தில் பாலமுருகன் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் தீபன் சக்கரவர்த்தியை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியா – நியூசிலாந்து; நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள்

Halley Karthik

ஆன்லைன் வங்கி மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள 7 டிப்ஸ்

Arivazhagan Chinnasamy

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

EZHILARASAN D