முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்! என்னென்ன தேதிகளில் சலுகை அளிக்கப்படுள்ளது தெரியுமா?

மெட்ரோ ரயிலில் டிச.3-ம் தேதி மட்டும் ரூ.5-க்கு பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், புயல் மற்றும் கனமழை காரணமாக இச்சலுகை டிச.17-ம் தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது.  சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் டிச.3-ம் தேதி மெட்ரோ க்யூ.ஆர் குறியீடு மூலம் ரூ.5 செலுத்தி பயணச்சீட்டுகள் பெற்று ஒருவழிப்பாதைப் பயணத்தை மேற்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த ரூ.5 பிரத்யேகக் கட்டணம் டிச.3-ம் தேதி மட்டுமே செல்லுபடியாகும் எனவும், இந்த சலுகையானது இ-க்யூ.ஆா் குறியீடு மூலம் பெறப்படும் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5-ம் தேதி முற்பகலில் கரையை கடக்க கூடும் எனவும், அடுத்து வரும் 3 நாட்களுக்கு (டிச. 3, 4, 5) வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் டிச.3, 4ம் தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால்,  மெட்ரோ ரயிலில் ரூ.5க்கு பயணிக்கலாம் என்ற சலுகை மேலும் ஒரு நாளைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, கனமழை காரணமாக நாளை பயணிகள் பலரும் சலுகையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்தச் சலுகை டிச. 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்றும் வழங்கப்படும்  என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற நினைவை பகிர்ந்த ராகுல்காந்தி..!

Web Editor

மனசாட்சியை உறங்க வைத்து விட்டு ஆட்சி நடத்த முடியாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

Web Editor

விளைநிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

Jeba Arul Robinson

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading