முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி மத்திய அமைச்சரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்கக்கோரி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள், லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறு காரணமாக காணாமல் போனதையடுத்து, அவர்களை மத்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடந்த 16-ஆம் தேதியன்று கடிதம் எழுதியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று நேரில் சந்தித்து, தமிழக மீனவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அதற்கான கடிதத்தையும் அவர் அளித்தார்.

தமிழக மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஈபிள் டவர் முன்பு இந்திய அதிசயம்

G SaravanaKumar

சசிகலா விடுதலையால் எந்த மாற்றமும் ஏற்படாது: ஜி.கே.வாசன்

Niruban Chakkaaravarthi

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல்!

Gayathri Venkatesan