தமிழ்நாட்டில் நாளை முதல் 27 மாவட்டங்களில், மதுபானக்கடைகள் திறக்க உள்ள நிலையில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுபான சில்லறை விற்பனை கடைகளின் அனைத்து பணியாளர்களும் காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்றும்,
மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுபானக் கடை பணியாளர்களில், உடல் தகுதி வாய்ந்த 55 வயதிற்கு கீழுள்ள அனைத்து பணியாளர்களும், பணியில் இருக்க வேண்டும் எனவும், மதுபான சில்லறை விற்பனை கடைகளில், கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்புவேலி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும், எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுபானக் கடையில் மதுபானம் வாங்க வரும் நபர்களின் கூட்டத்தை, இரண்டு பணியாளர்கள் வெளியில் இருந்து ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் இல்லாமல் மதுபானம் வாங்க வரும் நபருக்கு, கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான சில்லறை விற்பனை கடைகள் திறக்கும் பொழுதும், மூடும் பொழுதும் உட்புறமும், வெளிப்புறமும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் எனவும், மதுபானம் வாங்க வரும் நபருக்கு அதிகளவில் மதுபானங்களை வழங்கக் கூடாது, என்பன உள்ளிட்ட நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.