சானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!

கடலூர் அருகே சானிடைசரை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரித்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

கடலூர் அருகே சானிடைசரை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரித்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போலி மது தயாரித்த உத்திராபதி, ரகுபதி, தண்டபாணி உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

மேலும் போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 360 லிட்டர் சானிடைசர், 2500 போலி மதுபாட்டில்கள், பேக்கிங் இயந்திரங்கள், ஒரு மினி வேன், ஒரு கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.