ஒரே நாளில் 97 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைவு!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரேநாளில் 19 லட்சத்து 2 ஆயிரத்து…

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரேநாளில் 19 லட்சத்து 2 ஆயிரத்து 9 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 60 ஆயிரத்து 753 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் புதிதாக ஆயிரத்து 647 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 85 ஆயிரத்து 137ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 97 ஆயிரத்து 743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரேநாளில் 33 லட்சத்து 85 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.