தமிழகத்துக்கு அடுத்த 5 நாட்களுக்குள் மகாராஷ்டிராவிலிருந்து கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை டெல்லியில் சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர் அளித்த கடிதத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறியிருந்தார். எனவே தமிழகத்துக்கு கூடுதலாக 180 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து டி.ஆர்.பாலுவிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த 5 நாட்களுக்குள் தமிழகத்துக்கு மகாராஷ்டிராவிலிருந்து கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இது தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தி உள்ளார்.