நடிகர் வடிவேலு கிணற்றைக் காணும் என்பது போல் திருச்செந்தூர் அருகே
மேலத்திருச்செந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மேலத்திருச்செந்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை காணவில்லை எனக் கூறி நா.முத்தையாபுரம் , கீழநாலுமூலைக்கிணறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசிடம் அப்பகுதி பொதுமக்கள் மேல திருச்செந்தூர் ஊராட்சி அலுவலகத்தை ஒரே நாளில் காணவில்லை என பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மேலதிருச்செந்தூர் ஊராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு முறையான எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் ,
தீர்மானம் நிறைவேற்றாமல் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தியதால் வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் அரசின் பல்வேறு
தேவைகளை நிறைவேற்ற முடியாமல் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
—-ரெ.வீரம்மாதேவி
வடிவேலு பாணியில் ஊராட்சி அலுவலகத்தை காணவில்லை என பொதுமக்கள் புகார்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.