ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பாஜகவினரே அறிவிப்பார்கள் என்று இபிஎஸ் தரப்பு அதிமுக மூத்த நிர்வாகியான டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முன்னதாக திமுக கூட்டணி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக இன்று காலை தெரிவித்ததோடு, தமாக தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இதையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக, இபிஎஸ் தரப்பு அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, தங்கள் தரப்புக்கு ஆதரவு தர வேண்டுமென்று அவர்கள் அண்ணாமலையிடம் கேட்டுக் கொண்டனர். அண்ணாமலையுடன் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து பாஜகவினரே அறிவிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.