முக்கியச் செய்திகள்தமிழகம்

“கள்ளக்குறிச்சி சம்பவம் போன்ற மற்றொரு சம்பவம் நடக்கக்கூடாது!” – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கள்ளக்குறிச்சி சம்பவத்தை போன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துகுமாரை ஒரு கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடந்த வாரம் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் டவுன் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்ட நிலையில் சிலர் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பினருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என பாதிக்கப்பட்ட தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி, இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகள் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள மதுபான கடைகள் 24 மணி நேரம் மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள், இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று வாதிட்டார். மேலும் சட்டவிரோத மது விற்பனை சம்பந்தமான வீடியோக்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.

அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் பார்த்த நீதிபதி அதிர்ச்சி அடைந்து, மாவட்ட தலைநகரான திண்டுக்கல்லில் இதுபோன்ற நடவடிக்கைகளை காவல்துறையினர் எவ்வாறு அனுமதிக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் கள்ளக்குறிச்சியில் பல அப்பாவிகள் இறந்து உள்ளனர். இதை போன்ற சம்பவங்கள் தொடர வேண்டுமா? என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

சட்ட விரோத மது விற்பனையை பொதுமக்களே சென்று வீடியோ புகைப்படம் எடுத்த பின்பும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. இவர்களுக்கு உதவியாக உள்ள காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போன காவல்துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து நீதிபதி, சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தரப்பில் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

தடுப்பூசி தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்துள்ளது – டி.ஆர்.பாலு

Gayathri Venkatesan

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!

Web Editor

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையேயான போர்; கமல்ஹாசன் கருத்து!

Saravana

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading