முக்கியச் செய்திகள்தமிழகம்

தக்காளி விலை கிடுகிடுவென உயர்வு – அடுத்த 15நாட்களில் பொதுமக்களுக்கு ஷாக் காத்திருக்கிறது!

தக்காளி விலை கிடுகிடுவென உயர்வால் அடுத்த 15நாட்களில் பொதுமக்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.  ஒரு கிலோ ரூ.80க்கு விற்கப்படும் நிலையில்,  சில்லறை விற்பனையில் ஏற்கனவே விலை ரூ.90ஐ நெருங்கிவிட்டது.  விரைவில் ரூ.100ஐ தொடும் எனவும் அஞ்சப்படுகிறது.

விலை உயர்வால் மக்கள் தேவையை குறைத்து கொண்டு காய்கறிகளை வாங்குவதாகவும், இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் நேரத்தில் தக்காளி விலை 20 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளது. தக்காளியின் விலை நிலவரம்  வருகிற 10 முதல் 15 நாட்கள் வரை குறைய வாய்ப்பில்லை என கமிஷன் மண்டி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி: 3 மணி நிலவரப்படி 135 தொகுதிகளில் முன்னிலை!

Syedibrahim

அசாமில் வாக்குப்பதிவு நிறைவு!

EZHILARASAN D

நாடாளுமன்றத்தை பரபரப்பாக்கிய மேற்கோள் – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன?

Jeni

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading