குற்றம்தமிழகம்செய்திகள்

சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையன் – தடுத்த கணவருக்கு வெட்டு!

அரக்கோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற கொள்ளையனை தடுக்க முயன்ற கணவரை வெட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன் (42). இவர் தனியார் கம்பெனி தொழிலாளி ஆவார். இவரது மனைவி ரூபா (38). இவர்கள் இருவரும் திருத்தணியில் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு, பேருந்தில் அரக்கோணம் தாலுகா பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது ரூபா கால் வலியால் மெதுவாக நடந்து செல்ல மனைவிக்கு முன்பாக 10 அடி தொலைவில் தனஞ்செழியன் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டிருந்த கொள்ளையன் திடீரென ரூபா கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை சவரன் செயினை பறிக்க முயன்றுள்ளான். அப்போது செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டு ‘திருடன் திருடன்’ என ரூபா கூச்சலிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கொள்ளையன் இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்லும்போது முன்னால் சென்று கொண்டிருந்த கணவன் தனஞ்செழியன் கொள்ளையனின் சட்டையை பிடித்து இழுக்க முயன்றார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனஞ்செழியனை வெட்ட முயன்ற போது அவர் கத்தியை கெட்டியாக பிடித்துள்ளார். கத்தியை கொள்ளையன் இழுத்ததில் தனஞ்செழியனின் கை விரல்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்
சம்பவம் குறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி
கண்காணிப்பு கேமராவில் கொள்ளையனின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா என்று
விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஹிஜாப் அணிந்து ரியல் எஸ்டேட் வியாபாரி ஓட ஓட விரட்டி படுகொலை : 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

Web Editor

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுட்டுக்கொலை

G SaravanaKumar

பிரேசில் நிலச்சரிவுக்கு 36 பேர் பலி..! மீட்பு பணிகள் தீவிரம்..!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading