செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை கலை அரங்கில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் முதலாம் ஆண்டு மருத்துவகல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணியும் விழா நடைபெற்றது.
இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 1கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தபட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 10லட்சம் ரூபாய் மதிப்பில் புதியாக கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினைத் திறந்து வைத்தார். மேலும் 5.23கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு மருத்துவ கட்டிடங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் செங்கல்பட்டு மருத்துவகல்லூரியில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர்களும், மற்றும் அரசு அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் எங்கொல்லாம் ஆரம்ப சுகாதாரத்திற்க்கு கூடுதல் கட்டிட வசதி தேவைபடுகிறதோ, துணை சுகாதார நிலையத்திற்க்கு மற்றுக்கட்டிடங்கள் தேவைபடுகிறதோ அங்கேல்லாம் அந்த கட்டிடங்களை கட்டி தருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு எல்லா மாவட்டங்களிலும் கட்டிடங்களை கட்டி தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
வாரத்திற்கு இரண்டு முறை பல மாவட்டங்களுக்கு சென்று இது போல் கட்டிடங்கள் திறந்து வைத்துவிட்டு வந்துகொண்டு இருக்கிறேன். 12 ஊர்களுக்கும் சென்று தனித்தனியே கட்டிடங்களை திறந்து வைக்கும் விழாவில் உள்ளவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அந்த அளவுக்கு கிராம மக்களின் தேவைகளில் ஒன்றாக இந்த கட்டிடங்கள் இருந்து கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனைக்கு வந்த புறநோயாகிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது.
அண்மைச் செய்தி : பல்கலைக்கழகங்களில் தொலைநிலை படிப்புகளுக்கான அங்கீகாரம்- 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ஆனால், தற்போது நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. அப்படி என்றால் நோயாளிகள் எண்ணிக்கை கூடியுள்ளதா என்பது இல்லை அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை மக்களுக்கு அளிக்கப்படுவதால் இரு மடங்கி நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் இரு மடங்கு நோயாளிகள் நம்பிக்கையுடன் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.