33.3 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் குற்றம்

மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்

திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர், பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

திருப்பூர் சலவைபட்டறை, ஜே.ஜே. நகர் பகுதியில் ஓட்டுநர் குமார், தனது மனைவி தனலட்சுமியுடன் கடந்த 5 மாதங்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி தனலட்சுமி, அவரது ஆண் நண்பர் காட்டுராஜா என்பவருடன் தவறான நட்பில் இருந்து வந்ததாகவும், அதனை கணவன் குமார் கண்டித்ததாகவும் தெரிகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆண் நண்பருடனான தவறான நட்பை தொடர்ந்து வந்ததால் ஆத்திரமுற்ற கணவன் குமார், அரிவாளால் மனைவியை வெட்டி படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து வேலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சரண்அடைந்த கணவன் குமாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading