முக்கியச் செய்திகள் குற்றம்

மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்

திருப்பூரில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவர், பின்னர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

திருப்பூர் சலவைபட்டறை, ஜே.ஜே. நகர் பகுதியில் ஓட்டுநர் குமார், தனது மனைவி தனலட்சுமியுடன் கடந்த 5 மாதங்களாக அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி தனலட்சுமி, அவரது ஆண் நண்பர் காட்டுராஜா என்பவருடன் தவறான நட்பில் இருந்து வந்ததாகவும், அதனை கணவன் குமார் கண்டித்ததாகவும் தெரிகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆண் நண்பருடனான தவறான நட்பை தொடர்ந்து வந்ததால் ஆத்திரமுற்ற கணவன் குமார், அரிவாளால் மனைவியை வெட்டி படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து வேலம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் சரண்அடைந்த கணவன் குமாரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இன்று வெளியாகும் ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் – ஆர்ஆர்ஆர் இடம்பெறுமா?

Web Editor

தமிழ்நாட்டில் 500 கலைஞர் உணவகங்கள்; அமைச்சர் தகவல்

G SaravanaKumar

சூசையப்பர் ஆலய 165வது ஆண்டு விழா; பாய்மர படகு போட்டி

Halley Karthik