முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் – உச்ச நீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் முதலமைச்சரை சந்தித்து தீர்வு காண வேண்டும் என தெரிவித்ததோடு, மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கில் அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்காத அவரின் செயல்பாட்டை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். அத்துடன் மசோதாக்கள், அரசு உத்தரவுகள் மீது ஆளுநர் முடிவு எடுக்க கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,  நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா,  மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமா்வு முன்பாக கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது நீதிபதிகள், “அரசமைப்புச் சட்டப் பிரிவு 200-இன்படி, மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்கலாம், ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம் மற்றும் சட்டப்பேரவையின் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பலாம். அதே வேளையில், சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநரால் அனுப்ப முடியுமா என்று கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர்கள் சிங்வி மற்றும் ரோத்தகி, ‘அவ்வாறு செய்ய முடியாது’ என்று தெரிவித்திருந்தனர்.

 

இதையடுத்து வழக்கு இன்று மீண்டும் தொடங்கிய போது, ஆளுநருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தரப்பில் குழப்பம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.  மேலும், 10 மசோதாக்களையும் தமிழ்நாடு அரசு முதலில் அனுப்பிய போதே குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியிருக்கலாமே? என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மசோதாக்களுக்கு ஒப்புதலும் தராமல், சட்டப்பேரவைக்கும் திருப்பி அனுப்பாததால் அவரது தரப்பில் குழப்பம் உள்ளது எனவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துவிட்டு மறு நிறைவேற்றம் செய்து அனுப்பிய பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

2வது முறை நிறைவற்றப்பட்ட மசோதாக்களை எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும்? ஆளுநர் தீர்வு காண வேண்டும், இல்லையெனில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 11-ந் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

Web Editor

மகிந்த ராஜபக்ச வெளிநாடு செல்ல தடை

Halley Karthik

பண்ருட்டியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேர்தல் பரப்புரை!

Halley Karthik

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading