சென்னையில் நாளை ஆரம்பமாகும் 47-வது புத்தகக் காட்சி!

பபாசி என அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்க உள்ளது. சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில்…

பபாசி என அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47வது சென்னை புத்தகக் காட்சி நாளை தொடங்க உள்ளது.

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடைபெற்ற வரும் நிலையில், 47வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (ஜன. 02) முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள் : “எளிய மக்களும் பயன்படுத்தலாம்..!” – அம்ரித் பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு

புத்தகக் காட்சியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை புத்தகக் காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகக் காட்சியில் சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.