திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்டவைகளில் ஐந்தாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
2020-ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாகக் கூறி ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை முடக்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தச் சூழலில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் தனது கல்வி நிலையங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5-ம் தேதி முதல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், புதுச்சேரி, திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒருசில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், forensic audit எனப்படும் தொழில்நுட்ப தடயவியல் ஆய்வை வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் இருந்து ரூ.23,000 கோடிக்கும் மேலாக ஐபோன் ஏற்றுமதி!
குறிப்பாக மருத்துவமனை கல்லூரி அலுவலகங்கள் ஆகியவற்றில் மென்பொருள்கள் பயன்படுத்தி கணக்கு வழக்குகளை மறைத்து வைத்திருக்கின்றார்களா என்ற அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. வெளிநாட்டு முதலீடுகள் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கணக்குகள் உள்ளிட்டவற்றை கண்டுபிடிக்கும் பணியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.