இசைத் திருவிழா நடைபெற்ற இடத்தில் இருந்து 260-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ம் தேதி காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா். 2,500 ராக்கெட் குண்டுகள் மட்டுமே ஹமாஸ் வீசியதாகவும், அவர்கள் ஊடுருவிய 22 இடங்களில் சண்டை தொடா்வதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை 3வது நாளாக தொடா்ந்து வருகிறது. இதனிடையே காஸாவில் வசித்து வரும் மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காஸாவுக்கு வழங்கப்படும் குடிநீர், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை நிறுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள் : சாதிவாரி கணக்கெடுப்பு வேறு..! வன்னியர் உள்ஒதுக்கீடு வேறு..! – அன்புமணி ராமதாஸ் பேட்டி
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் தாக்குதலுக்கு உள்ளான இசைத் திருவிழா நடைபெற்ற இடத்தில் இருந்து 260-க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் மீட்புக்குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் அதிகமானோர் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினர் ஈடுபட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இருதரப்புக்கு இடையிலான மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100 ஆக உயர்ந்துள்ளது.