ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற போர் பாஸ் என்பவருக்கு சொந்தமான ஒரு விசைப்படகையும் அதிலிருந்த மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தனுஷ்கோடிக்கும் தலை மன்னாருக்கும் இடையே வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்த மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிகழ்வு ராமேஸ்வரம் மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







