தமிழ்நாட்டில், புதிதாக 1,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல், அரசின் தீவிர நடவடிக்கையால் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில், கொரோனாவுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,950 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது.
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,950 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 75 ஆயிரத்து 308 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில், 1,807 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 24 லட்சத்து 13 ஆயிரத்து 930 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 157 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் 241 பேருக்கும் ஈரோட்டில் 185 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 5 பேருக்கும் தென்காசியில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.









