மருத்துவ மாணவி கொலை விவகாரம்: பீகாரில் துப்பாக்கி வாங்கி பயிற்சிப் பெற்ற காதலன்

மருத்துவ மாணவி மானசா கொலை வழக்கில் பீகாரில் துப்பாக்கி வாங்கிவந்து கொலையாளி அதில் பயிற்சி பெற்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் மானசா (24), எர்ணாகுளம் கோதமங்கலத்தில் உள்ள பல்…

மருத்துவ மாணவி மானசா கொலை வழக்கில் பீகாரில் துப்பாக்கி வாங்கிவந்து கொலையாளி அதில் பயிற்சி பெற்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் மானசா (24), எர்ணாகுளம் கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்தார். இதற்காக கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தோழிகளுடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில் ராகில் என்பவரை மானசா காதலித்துள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனர். ராகிலின் நடவடிக்கைகள் பிடிக்காததால், மானசா பேசுவதை நிறுத்திவிட்டார். ஆனால், ராகிலால் காதலை விட முடியவில்லை. அவருக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மானசா பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார், எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

அதைக் கண்டுகொள்ளாத ராகில், மானசா தங்கியிருந்த வீட்டின் அருகிலேயே ஒரு மாதத்துக்கு முன் வாடகைக்கு அறை எடுத்திருக்கிறார். அங்கிருந்தபடியே, மானசாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சக நண்பர்களுடன் மானசா சாப்பிட்டுக் கொண்டிருந்திருந்தபோது, அங்கு வந்த ராகில், மானசாவின் கையை பிடித்து அறைக்குள் இழுத்துச் சென்று கதவைப் பூட்டினார். சிறிது நேரத்தில் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் உயிரிழப்பு கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மானசா மற்றும் ராகில் உடலில் தலா 2 குண்டுகள் பாய்ந்துள்ளன. அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ராகில் பீகாரில் சிலருடன் போனில் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று விசாரித்தனர்.
அவர் மானேஷ் குமார் வர்மா என்ற டாக்ஸி டிரைவர் மூலமாக சோனு குமார் மோடி என்பவரிடம் 35 ஆயிரம் ரூபாய்க்கு ராகில் துப்பாக்கியை வாங்கியுள்ளார். இதையடுத்து சோனுகுமார் மோடியை போலீசார் கைது செய்தனர்.

ராகிலுக்கு மானேஷ்குமார் துப்பாக்கி சுடுவது எப்படி என்பது பற்றி கற்றுக் கொடுத்திருக் கிறார். இதையடுத்துதான் கேரளா வந்து ராகில் மானசாவை சுட்டுக்கொன்றுள்ளார்.

இதற்கிடையே, மானேஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு பயிற்சிபெறும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அவர் ராகிலுடன் காரில் செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளதால் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.