தமிழ்நாட்டில் புதிதாக 1,556 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 088 பேருக்கு கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது என்றும் இதில் 1,556 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் இதுவரை 26 லட்சத்து 24 ஆயிரத்து 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 564 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25
லட்சத்து 72 ஆயிரத்து 942 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில்,
பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை
உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 036 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிதாக 169 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 145 பேர், கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில்
இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 110 பேருக்கும் தஞ்சாவூரில் 104 பேருக்கும் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.







