தமிழகத்தில் ஒரே நாளில் 33 ஆயிரத்து 075 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 33, 075 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, இதுவரை தமிழகத்தில் 16 லட்சத்து 31 ஆயிரத்து 291 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்போது, 2 லட்சத்து 31 ஆயிரத்து 596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 ஆயிரத்து 486 பேர் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 13 லட்சத்து 81 ஆயிரத்து 690 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 335 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 005 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 6150 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 86 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 5067 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கோவையில் 3264 பேருக்கும் செங்கல்பட்டில் 2154 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 1241 பேருக்கும் திருவள்ளூரில் 1829 பேருக்கும் திருச்சியில் 1544 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.







