கொரோனா பெருந்தொற்று காலத்திலும் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் 2021-ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடைபெற்று முடிந்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பெருந் தொற்று காரணமாக முதல் முறையாக உலக அழகி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2021-ம் ஆண்டுக்கான 69-வது உலக அழகி போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 70 பேர் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆண்டுக்கான உலக அழகியாக மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிரேசிலின் ஜூலியா காமா 2-வது இடத்தையும், 3-வது இடத்தை இந்தியாவைச் சேர்ந்த அட்லைன் காஸ்டெலினோ பிடித்தார்.
பொதுவாக உலக அழகி போட்டியில் பொழுதுபோக்கு அம்சங்களே இடம்பெறும் நிலையில் மியான்மர் நாட்டை சேர்ந்த துசர் விண்ட் லவின் என்பவர் ‘Pray for Myanmar’ என்ற பதாகையுடன் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மியான்மரியில் தற்போது நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சியை விலக கோரி அந்நாட்டு மக்கள் தினமும் போராட்டத்தில் ஈடுப்பட்டுவருகிறார்கள். இந்நிலையில் உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு மியான்மர் அழகி துசர் விண்ட் லவின் இறுதிசுற்றுக்கு முந்தையை சுற்றான சிறந்த தேசிய ஆடை சுற்றில் இந்த பதாகையுடன் மேடையில் தோன்றினார்.
சிறந்த தேசிய ஆடைக்கான விருது துசர் விண்ட் லவினுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலக அழகி மேடையை அரசியல் மேடையாக மாற்றியதன் மூலம் உலக மக்களின் அன்பு பட்டத்தை பெற்றுள்ளார் துசர் விண்ட்.