தமிழ்நாட்டில் கடந்த 29 நாட்களில் உடல் உறுப்பு தானம் செய்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தெரிவித்துள்ளனர்.
விபத்து, புற்றுநோய், பிறவி குறைபாடு மற்றும் தீக்காயம் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சையின் மூலம் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு மாற்று உறுப்புகள் தேவைப்படுவதன் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் ; ஹாங்காங் – சென்னை இடையே நேரடி விமான சேவை – 4ஆண்டுகளுக்கு பின் தொடக்கம்.!
பொதுமக்களிடையே சாலை பாதுகாப்புகள் மற்றும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால், நாள்தோறும் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவிலான ஆபத்துக்களும், சில சமையங்களில் மூளைச்சாவு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதையடுத்து, விபத்துகளில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல் உறுப்புகள் யாருக்கும் பலனில்லாமல் வீணாகிறது. உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு (2023), செப்டம்பர் 23ம் தேதி உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உறவினர்கள், உடல் உறுப்பு தானம் அளிக்க ஒப்புதல் அளித்தவுடன், உடல் உறுப்புகள் பெறப்படுகிறது. தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் இல்லத்தில் நடைபெறும் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், 2024 ஜனவரி 1 முதல் 29 ஆம் தேதி வரையிலான கணகெடுப்பில், தமிழ்நாட்டில் இதுவரை 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்போதைய நிலவரப்படி, சிறுநீரகம் 48பேர், கல்லீரல் 438பேர், இதயம் 10பேர், நுரையீரல் 13 பேர், எலூம்புகள் 17 பேர், தோள் 10 பேர் என தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த உடல் உறுப்புகளால் பலர் பயன் அடைந்துள்ளனர்.